மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமானவர்களுக்கு அவசர வேண்டுகோள்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்கக் காரணமாக இருந்த மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அனைவரையும் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவே இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். அத்துடன், குறித்த நபர்கள் உடனடியாக 0113456548 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறானவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed